சசிகாலா மற்றும் பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கடும் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில், அந்ததந்த தொகுதி மக்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டி கூறிவந்தனர்.
சசிகலா தலைமையை பன்னீர் செல்வம் நிராகரத்த சில மணி நேரங்களில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக களம் இறங்கினார். தொடர்ந்து, அவரது தொகுதி மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் ஆறுக்குட்டிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆங்காங்கே ஆறுக்குட்டியை வாழ்த்தும் வகையில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் அங்கிருந்து தப்பி கோவை வந்ததாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தொடர்ந்து வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் அருண்குமாருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். சசிகலா அணிக்கு எதிராக நின்றதன் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டதாகவும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அருண்குமார் இரு அணிக்கும் ஆதரவு தராமல் சட்டமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.