கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை - வாழை, தென்னை மரங்கள் சேதம்!

கோவை பன்னிமடை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவை உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.



இந்த நிலையில், ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு பன்னிமடையை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பிரபு துரைசாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சேதங்கள் குறித்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...