தமிழகம் முழுவதும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், குட்டைகள் போன்றவை தூர்வாரப்பட வேண்டும், வருங்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மரங்களை நடுவதை கோரிக்கையாக பாரதீய ஜனதா கட்சி முன் வைத்து 10 ஆயிரம் மர கன்றுகளை 5 நாள் யாத்திரையில் நட உள்ளதாகவும், பா.ஜ.க.வின் மத்திய தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மர கன்றுகள் நட யாத்திரை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சிறுவாணி அணை தூர்வாரப்படவில்லை எனவும், 40 சதவீதம் சேரும், சகதியாக உள்ளதாகவும் கேரளா அரசின் அனுமதிப்பெற்று அதற்கு நிதியை தமிழக அரசு ஒதுக்கி உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நீர் சாரணலாம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் சிறுவாணி அணை தூர்வாரப்படவில்லை எனவும், 40 சதவீதம் சேரும், சகதியாக உள்ளதாகவும் கேரளா அரசின் அனுமதிப்பெற்று அதற்கு நிதியை தமிழக அரசு ஒதுக்கி உடனடியாக தூர்வாரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் நீர் நிலைகளை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நீர் சாரணலாம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.