கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள் - பரபரப்பு

கோவை மருதமலை அருகே ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள் மற்றும் சின்னதடாகம் பகுதியிலும் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை மற்றும் சின்னதடாகம் பகுதிகளில் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு கெம்பனூர் முதல் கணுவாய் பகுதி வரை யானைகளின் நடமாட்டத்தை 4 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.



அப்போது, மருதமலை சுற்றுவட்டார பகுதியான லேபர்ஸ் காலனி அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள் நுழைந்தது. இதனையறிந்த வனத்துறையினர், யானைகளை மருமலையின் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதேபோல், காட்டு யானை ஒன்று சின்னதடாகம் அருகேயுள்ள வாத்தியார் தோட்டம் பகுதியில் நள்ளிரவில் வெளியேறி உலா வந்தது. இதனையறிந்த வனத்துறையினர், அதனை காப்புக்காடு வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாத வண்ணம் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...