புத்தக வாசிப்பை ஏற்படுத்தும் 'புக்ஸ் ஆன் வீல்' ஆட்டோ நூலகம் - கோவையில் தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன் ‘புக்ஸ் ஆன் வீல்’ என்ற தலைப்பில் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 500 ஆட்டோ நூலகங்களை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் 500 ஆட்டோக்களில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பங்களிப்புடன் பொதுமக்களிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் வகையில் புக்ஸ் ஆன் வீல் (Books On Wheel)என்ற தலைப்பில் 500 ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டோ நூலகத்தின் திறப்பு விழாவில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலகத்தை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

இதுபோன்ற ஆட்டோ நூலகம் மற்றும் தெருமுனை நூலகங்களை இதற்கு முன்பும் திறந்து வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக KIT பங்களிப்புடன் தற்போது மாநகரில் உள்ள 500 ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இந்த புத்தகங்களை வாசித்து பயனடையும் விதமாக இது அமைந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநருடன் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். இந்த உறவை பலப்படுத்த இது ஒரு புதிய முயற்சியாக எடுத்துள்ளோம்.

இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனக்கவலையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். கோவை மாநகரில் மோசடி வழக்குகள் குறித்து FIR பதிவு செய்து வருகின்றோம். இதுகுறித்து அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பத்திரிக்கை, ஊடகத்துறை, நண்பர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது சம்பந்தமான பல்வேறு செய்திகளை வெளியிட்டால் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய உதவியாக இருக்கும். மோசடி வழக்குகளில் யாராவது ஏமாற்றப்பட்டு இருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகலாம் அவ்வாறு அணுகும் பட்சத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் இளைஞர்கள் என அனைவரையும் அழைத்து முறையான போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...