உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி ருத்ரவேணி முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியில் போதை மற்றும் ஆசிட் வீச்சு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்விற்கு உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, ருத்ர வேணி, முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குனர் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகர் டாக்டர் மஞ்சுளா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரகுபதி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...