பென்சனுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்திடுக - கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

வருங்கால வைப்புநிதி இபிஎப் பென்சன் விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஒன்றிய அரசின் துறை அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.


கோவை: வருங்கால வைப்புநிதி இபிஎப் பென்சன் விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் ஐவுளி துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, 3.03.2023 அன்றைய தேதியின் அடிப்படையில் அதிக பிஎப் ஓய்வூதியத்திற்கான உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியை நீட்டிக்குமாறு 25,000க்கும் மேற்பட்ட ஜவுளி, பிற தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

இவர்களில், பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். உடனடியாக தகவல் அறிய இயலாத நிலை உள்ளது. ஆகவே இந்த செய்தி இபிஎப்அமைப்புகளின் மூலம் அவர்களை சென்றடைய கூடுதல் கால அவகாசம் வேண்டும்.

எனவே, அதிக பிஎப் ஓய்வூதியக் கோரிக்கை படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பது பற்றிய தகவலறியாத விபரங்கள்இல்லாத இபிஎப் சந்தாதாரர்களால், செயல்முறையை குறுகிய காலத்தில் முடிக்க முடியாது. மேலும், இபிஎப் ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் சிரமத்தில் இருப்பவர்களாக உள்ளனர்.

ஆகவே, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், சங்கங்களின் கூட்டு அறிக்கையை இபிஎப்ஓ இணையதளத்தில் பதிவேற்றலாம். தாங்களும் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்களைசமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...