சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியேறிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.



தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிரணியில் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் நாற்காலி, மைக்கை உடைத்தனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜையின் மீது ஏறி கோஷமிட்டார். இதற்கு திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சபாநாயகர் தி.மு.க எம்,எல்,ஏக்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற உத்தரவுவிட்டார். இந்நிலையில் திமுக எம்,எல்,ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்.  சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து மு.க.ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது 20 திமுக உறுப்பினர்கள் உள்பட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது அவைக்காவலர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் அவையைவிட்டு வெளியே வந்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சட்டமன்றத்தில் நடந்ததை விளக்கினார். தற்போது திமுக உறுப்பினர்கள் கவர்னரை சந்திக்க செல்வதாகவும் அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...