வேங்கை வயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..! - தாராபுரத்தில் தடா பெரியசாமி வலியுறுத்தல்

திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ரூபாயை திமுக அரசு ஏமாற்றி உள்ளதாக பாஜக பட்டியலின பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி குற்றச்சாட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பட்டியலின அணியின் மாவட்ட தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார்.



பாஜக மாநில பட்டியலின பிரிவு தலைவர் தடா பெரியசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தடா பெரியசாமி கூறியதாவது:



திமுக அரசனது பட்டியலின சமூகத்தை வஞ்சித்து வருகிறது. பட்டியல் சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் ஏராளமான நிதியை ஒதுக்கி வருகிறது. மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் திமுக அரசு செலவு செய்யாமல் மனம்போன போக்கில் செலவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

22 -23 நிதியாண்டில் மட்டும் 16,442 கோடி அதில் பத்தாயிரத்தி நானூத்தி அறுபத்தாறு கோடி செலவு செய்யாமல் இருக்கிறது. திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ஏமாற்றிக் கொண்டு இருக்கும் அரசு திமுக அரசு.

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த செய்தியை பத்திரிகையாளர்களிடம் முன் வைத்தார் அதற்கு இதுவரை திமுக அரசின் முதல்வரோ, தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜோ இதுவரை வாய் திறக்கவில்லை.

அந்த அளவிற்கு பட்டியல் சமூகத்தை ஏமாற்றி சமூக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல் பட்டு வருகிறது. இதேபோன்று 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இருந்தபோது, பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யாமல் அதை எடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஏமாற்றி வருகின்றனர்.

இதை போன்று சமத்துவபுரம் என்று இந்த நிதியை எடுத்து செலவு செய்தார். தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியலின மக்களை ஏமாற்றுவதை நிறுத்தவில்லை என்றால் திமுக அரசை கண்டித்து எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் வேறொரு விஷயத்தை திசைமாற்றம் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஏமாற்றி விட்டீர்கள். மாவட்ட ஆட்சியரை கண்டித்து வந்ததாகவும் இதைத் தாண்டி காவல்துறையினர் சிபிசிஐடிக்கு அனுப்பினார்கள். நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுள்ளோம்.

உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளி யார் என்று காவல்துறைக்கும் தெரியும். உண்மை குற்றவாளிகளை மறைக்க பார்க்கிறார்கள். அதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென நாங்கள் கேட்கிறோம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...