பல்லடம் பனப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: பல்லடம் பனப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் பல்லடம் பணப்பாளையத்தில் விக்னேஷ் எலக்ட்ரிகல்ஸ் என்ற எலக்ட்ரிக்கல் கடையை நடத்தி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல கடைக்குச் சென்ற ரத்தினசாமி கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ரத்தினசாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கடைக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்மநபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்து கடைக்குள் இறங்கி வயர்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் பல்லடம் பணப்பாளையத்தில் விக்னேஷ் எலக்ட்ரிகல்ஸ் என்ற எலக்ட்ரிக்கல் கடையை நடத்தி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல கடைக்குச் சென்ற ரத்தினசாமி கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ரத்தினசாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கடைக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்மநபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்து கடைக்குள் இறங்கி வயர்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.