தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து, சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் வந்தார். அங்கு காந்தி சிலை முன்பு திடீரென எம்.எல்.ஏ.க்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் மெரினாவில் திமுகவினர் குவிந்து வருகின்றனர். மெரினாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் வந்தார். அங்கு காந்தி சிலை முன்பு திடீரென எம்.எல்.ஏ.க்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் மெரினாவில் திமுகவினர் குவிந்து வருகின்றனர். மெரினாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.