மடத்துக்குளம் அருகே பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார்.



மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி மீனாட்சி, பட்டியல் வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், மகாலட்சுமி,சத்தியவாணி மற்றும் சிவகாமி தலைமை ஆசிரியர், கெங்கநாயக்கன் பாளையம், மற்றும் நிவேதிகாகிட்ஸ் கிளப், பொதுமக்கள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...