கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - புகைப்பட கலைஞர் கைது

கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 1,100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான போலீசார், க.க.சாவடி அருகே உள்ள நவக்கரை பகுதியில் ரோந்துச் சென்றனர்.

அப்போது அங்குச் சாலையில் சந்தேகத்திற்கிடமாக கல்லூரி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கனேசன் மகன் அருண்பிரசாத் (29) என்பதும், இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றிக் கொண்டு, வட மாநிலங்களிலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் வாங்கி வந்து, அதை கேரளாவிலும், எல்லையில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...