முதல்வர் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தாராபுரம் நகர திமுக சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திமுக நகர இளைஞரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு அன்புநிதி என பெயர் சூட்டி பரிசு பெட்டகம் மற்றும் குழந்தையின் அம்மாவிற்கு சேலை மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து 2வது வார்டில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இதையடுத்து, நஞ்சம்பாளையம் சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, சிலேடு, பென்சில், மரக்கன்றுகள் ஆகியவற்றை திமுக நகர அவைத் தலைவர் கதிரவன் மற்றும் நகர துணைத் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

தாராபுரத்தில் உள்ள 30 வார்டு பகுதிகளிலும் திமுக கொடிகள் ஏற்றப்பட்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...