கோவையில் 10,11,12 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்!

கோவை மாவட்டத்தில் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதியான இன்று துவங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கோவை மாவட்டம் முழுவதும் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...