கோவையில் 10,11,12 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்!

கோவை மாவட்டத்தில் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதியான இன்று துவங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கோவை மாவட்டம் முழுவதும் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...