உடுமலையில் களைகட்டியது வடு மாங்காய் சீசன் - விற்பனை அமோகம்!

திருப்பூர் உடுமலையில் வடுமாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் நாள் ஒன்று சுமார் ஒரு டன் அளவிலான மாங்காய் விற்பனைக்கு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடு மாங்காய் சீசன் களை கட்டிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களான தளிஞ்சி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சி கொட்டான் பாறை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் ஏராளமான வடுமாங்காய் மரங்கள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கேற்ப வேறு எங்கும் இல்லாத அளவில் வடுமாங்காய் மரங்கள் இங்கு உள்ளன. சித்திரை மாதத்தில் சீசன் துவங்கும் நிலையில் தற்போது வடு மாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு ஒரு டன் வரையில் இங்குள்ள மலை வாழ் மக்களால் வடு மாங்காய்களை கீழே கொண்டு வந்து, உடுமலை நகரின் முக்கிய வீதியான தளி ரோட்டில் மலை போல் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

கிலோ 100 ரூபாய் வரை இந்த வடுமாங்காய் விலை போகிறது. இதைப் பறித்துக் கொண்டு வரும் மலைவாழ் மக்கள் நல்ல வியாபாரம் கிடைப்பதாகவும் லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.



கோடை காலத்தில் கிடைக்கும் இந்த வடுமாங்காய் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். நல்ல புளிப்பு சுவையுடன் இருப்பதால் இந்த வடுமாங்காய்களை ஊறுகாய் செய்து வைப்பதன் மூலம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தயிர் சாதத்திற்கும் மற்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள ருசியான ஒரு வகை உணவாகும். தயிர் சாதத்திற்கும் மாவடுவிற்கும் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மாவடு ஊறுகாய் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும் என கூறப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட வடுமாங்காய் தற்போது உடுமலை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...