கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாம் - ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கக்கடவு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்வில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்ட கலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 314 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 55 லட்சத்தில் 60 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் கக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...