கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை திருட முயன்ற கும்பல் - ஒருவர் கைது

கோவை மதுக்கரை அரிசிபாளையம் அருகே ராமலிங்கம் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, கோழிகளை திருட முயன்ற கார்த்திக் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சரவணன், ரமேஷ் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரிசிபாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது55) அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு தூங்கச் சென்றார்.

அப்போது, நள்ளிரவு மூன்று மணியளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, தோட்டத்திற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் அங்கிருந்த ஆடு மற்றும் கோழிகளை திருட முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டதால் அங்கிருந்த சக விவசாயிகள், பொதுமக்கள் சுற்றி வலைத்து மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், ஒருவர் மட்டுமே சிக்கினார்.



இதையடுத்து அவரை மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நெகமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது28), என்பதும் அவருடன் குனியமுத்தூரை சேர்ந்த சரவணன் (வயது27) மற்றும் அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது22) ஆகியார் வந்ததும் தெரியவந்தது.

மேலும், குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்கள், ராமலிங்கம் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை திருட முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு, 3 பேர் மீதும் செல்வபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து, தப்பியோடி இருவரையும் தேடிவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...