வால்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அணிவித்தார். நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் மோதிரத்தை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வழங்கினார்.



மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகங்களையும் பரிசாக வழங்கினர்.



பின்னர் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள நகராட்சி தாவரவியல் பூங்காவில் 70 மரக்கன்றுகளை நடவு செய்தனர். அதேபோல் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் செல்வம், நகராட்சி கவுன்சிலர் அன்பரசன், ராஜேஸ்வரி பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...