கோவை துடியலூரில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா, கோவை துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி துடியலூரில் ஒன்றாவது வட்ட திமுகவினர், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை திமுகவினர் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் வட்ட கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னதாக 1ஆவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன்,பகுதி கழக நிர்வாகிகள் ராக்கிமுத்து, சன்சோமு, சண்முகசுந்தரம், பிரபாகரன், சுப்பிரமணியன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் காளிமுத்துசாமி, ஆனந்தன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...