கோவை துடியலூரில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா, கோவை துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி துடியலூரில் ஒன்றாவது வட்ட திமுகவினர், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை திமுகவினர் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் வட்ட கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னதாக 1ஆவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன்,பகுதி கழக நிர்வாகிகள் ராக்கிமுத்து, சன்சோமு, சண்முகசுந்தரம், பிரபாகரன், சுப்பிரமணியன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் காளிமுத்துசாமி, ஆனந்தன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...