கோவையில் லாவகமாக பைக் திருடும் கொள்ளையர்கள் - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை சிங்காநல்லூரில் மேன்சன் முன்பு பிரபாகரன் என்பவர் நிறுத்திவைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை, இரவில் இரண்டு இளைஞர்கள் லாவகமாகத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சியில் உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரபாகரன். தாய் தந்தையை இழந்த இவர், தனியாக வாழ்ந்து வருகின்றார். அழகு கலைஞராக வேலை செய்யும் இவர், மேன்சன் ஒன்றில் தங்கியிருக்கிறார்.பைக் மீது அலாதி பிரியம் கொண்ட பிரபாகரன், விலை உயர்ந்த உயர் ரக பைக் வாங்கும் கனவுடன் கடந்த ஐந்து வருடங்களாக சிறுக சிறுக பணம் சேமித்து வந்துள்ளார்.



இந்த நிலையில் ஒரே தவணையாக 2.17 லட்சம் ரூபாய் கொடுத்து, யமகா R15மாடல் பைக்கை வாங்கியுள்ளார்.



அந்த வாகனத்தைTN 37 DB 6977 என்ற எண்ணுடன் பதிவு செய்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய இந்த வாகனத்தை பணிக்கு செல்ல பயன்படுத்திய நிலையில், பணி முடிந்து இரவு பிரபாகரன் தங்கியிருக்கின்ற மேன்சன் முன் நிறுத்தியுள்ளார்.

வழக்கம்போல், காலை வந்து பார்த்தபோது தமது கனவு பைக் மாயமாகியிருந்தது கண்டு பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்துசிங்காநல்லூர் போலீசில் அவர்புகார் தந்தார். அதன்அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.



பைக்கை நள்ளிரவில் நோட்டமிட்டு வந்த பைக் கொள்ளையர்கள், யாரும் வருகின்றார்களா? என சுற்றிலும் பார்த்து லாவகமாக திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



மேலும், அந்தப் பைக்கின் லாக்கை இருவர் உடைத்து சாவி இல்லாமல் வண்டியை நகர்த்துவதும், வண்டி ஒயரை கட் செய்து ஸ்டார்டு செய்து வாகனத்தை ஓட்டி செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...