கோவை அருகே காட்டுயானை தாக்கி இளைஞர் பலி - சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது சோகம்!

கோவை மாங்கரை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர், தனியார் மருந்து நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். இவர் வீட்டின் அருகில் இரவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மாங்கரை பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, அங்கு குடியிருக்கும் மகேஷ்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது தாக்கியுள்ளது. மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்த போது வீட்டருகே காட்டு யானை மகேஷ்குமாரை தாக்கிவிட்டு அங்கேயே நின்றிருந்தது.



சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றவுடன் மகேஷ்குமாரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றிவந்தார்.

இது குறித்து, தடாகம் காவல் துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...