கோவை குரும்பாளையத்தில் ஏடிஎம் வாசலில் கிடந்த ரூ.7ஆயிரம் பணத்தை, பார்த்திபன், சதீஷ்குமார் என இரண்டு இளைஞர்களை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
கோவை: கோவையில் ஏடிஎம் வாசலில் கிடந்த பணத்தை, எடுத்து இரண்டு இளைஞர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை குரும்பபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம்-மிற்கு வரதையங்கார்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன்(26), லட்சுமி கார்டனை சேர்ந்த சதீஷ்குமார்(30) பணம் எடுக்க சென்றனர்.
அப்போது மையத்திற்குள் ரூ.7 ஆயிரம் கிடந்தது. இதை பார்த்த அவர்கள் உடனே அதனை எடுத்துச் சென்று கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். பணத்தைப் பெற்ற போலீசார் அவர்களை வெகுவாக பாராட்டினர். மேலும் போலீசார் பணத்தைத் தொலைத்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோவை குரும்பபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம்-மிற்கு வரதையங்கார்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன்(26), லட்சுமி கார்டனை சேர்ந்த சதீஷ்குமார்(30) பணம் எடுக்க சென்றனர்.
அப்போது மையத்திற்குள் ரூ.7 ஆயிரம் கிடந்தது. இதை பார்த்த அவர்கள் உடனே அதனை எடுத்துச் சென்று கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். பணத்தைப் பெற்ற போலீசார் அவர்களை வெகுவாக பாராட்டினர். மேலும் போலீசார் பணத்தைத் தொலைத்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.