கோவையில் கடந்த 1998ல் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களை முன்வைத்து வழக்கறிஞர் கரீம் எழுதிய நூல் தாழிடப்பட்ட கதவுகள். இந்நூலின் அறிமுக விழா சனியன்று சமுக நீதி வழக்கறிஞர் மய்யம் சார்பில் கோவை ரயில் நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் வெண்மணி தலைமை வகித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், திரைப்பட கலைஞர் ராஜேஷ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நத்தக்குமார் ஆகியோர் இந்நூலை அறிமுகம் செய்து பேசினர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், திரைப்பட கலைஞர் ராஜேஷ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நத்தக்குமார் ஆகியோர் இந்நூலை அறிமுகம் செய்து பேசினர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.