ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றியை கோவையில் கூட்டணி கட்சியினர் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை அடுத்த சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சமுத்து தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



முன்னதாக கோவை மாநகராட்சி 15வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கவுன்சிலர் சாந்தாமணி பச்சைமுத்துவிற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்ன ராமகிருஷ்ணன், மணி, 14வது வார்டு தலைவர் ரங்கசாமி, 15 ஆவது வார்டு செயலாளர் ரகுபதி சுபாஷ், கவுண்டம்பாளையம் திமுக பிரமுகர் ஜவகர், கே.ஜி.புதூர் கண்ணன், பழனிச்சாமி என்கிற மணி, கவுண்டம்பாளையம் ரவி, காங்கிரஸ் கட்சி சேர்ந்த ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...