106 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை - கோவை தனியார் மருத்துவமனை சாதனை!

துடியலூரில் உள்ள பாகிரதி மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரனீஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 106 வயது முதியவர் சுப்பிரமணியம் என்பவருக்கு 2.30 மணிநேரம் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.



கோவை: கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் 106 வயதான முதியவர் சுப்பிரமணியம். இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட இவர், 106 வயதிலும் அவரது வேலைகளை அவரே செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவரின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தார் கோவை துடியலூரில் உள்ள பாகிரதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 106 வயதிலும் சுப்பிரமணியத்தின் உடல் அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் அவரது எலும்புகள் வலுவாக இருந்ததையும் கண்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.



எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரனீஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 2 ½ மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திலேயே முதியவர் சுப்பிரமணியம் நடக்கத் தொடங்கியுள்ளார்.



இது குறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் பிரனீஷ் கூறும்போது, சாதரணமாக 70 வயதைக் கடந்தாலே எலும்புகள் வலுவில்லாமல் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் 106 வயதிலும் சுப்பிரமணியம் அவர்களின் எலும்புகள் மிகவும் உறுதியாக உள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து நல்ல நிலையில் நடக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு அவர்களது குடும்பத்தார் மிகவும் ஒத்துழைத்தனர். இவ்வளவு முதிய வயதில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது இதுவே முதல் முறை. அவரது உடல் ஒத்துழைத்ததிற்கு காரணம் அவரது உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியுமே. அனைவரும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அதிக கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...