பல்லடம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் செல்வம் என்பவரின் பஞ்சு ஆலையின் இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக எற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.


திருப்பூர்: திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் செல்வம் டெக்ஸ் என்ற பஞ்சாலையை நடத்தி வருகிறார். இன்று மாலை 6 மணியளவில் ஆலையிலிருந்த இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றத் தொடங்கியது.



சிறிது நேரத்தில் தீ மளமளவென இயந்திரத்தின் அருகே இருந்த பஞ்சுகளுக்கு பரவியதால், ஆலையின் ஒரு பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. இதைப்பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...