கோவை குழந்தைகள் காப்பத்தில் போக்சோ விழிப்புணர்வு - நீதிபதி பங்கேற்பு

கோவை காந்திமாநகரில் உள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று நீதிபதி கே.எஸ்.எஸ்.சிவா ஆய்வு மேற்கொண்டு, போக்சோ சட்டம் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: காப்பகங்களில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பது நம்முடைய தலையாய கடமை. குழந்தைகள் நலன் சார்ந்த அரசாங்க துறைகள், தன்னார்வலர்கள் இப்பணியை செய்துவருகின்றனர். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் காப்பகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை ஆவணம் செய்வது அவசியம்.



அதனடிப்படையில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரான, சார்பு நீதிபதியான கே எஸ் எஸ் சிவா, கோவை மாவட்டம் காந்தி மாநகரில் அமைந்துள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று குழந்தைகளுடன் உரையாடினார். போக்சோ சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.



அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகள் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பக தலைமை அலுவலர்கள் குழந்தைகள், நலக்குழுவினை சார்ந்தவர்கள், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பெண் குழந்தைகளை பாதுகாப்பது அவசியம் என்ற அடிப்படையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...