உடுமலை பேருந்து நிலையத்திற்கு அருகே வர்கீஸ் என்பவருக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர்: உடுமலையில் அதிகாலையில் ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வர்கீஸ் என்பவர் ஸ்டூடியோ வைத்துள்ளார்.

இவரது ஸ்டூடியோவில் அதிகாலை 3 மணி அளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் கடையிலிருந்த கேமராக்கள், புகைப்படக்கருவிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வர்கீஸ் என்பவர் ஸ்டூடியோ வைத்துள்ளார்.
இவரது ஸ்டூடியோவில் அதிகாலை 3 மணி அளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கடையிலிருந்த கேமராக்கள், புகைப்படக்கருவிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.