திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல் ஆணையர் நேரில் விழிப்புணர்வு

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்களைக் கொண்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாகப் பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனிடைய திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்பதை தொழிலாளர்களுக்கு விளக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் திருப்பூரில் நடைபெற்றது இல்லை எனவும், இருப்பினும் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஏதேனும் அச்சம் இருப்பின் காவல்துறையின் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு தங்கள் அச்சத்தைப் போக்கிக் கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்கள் எதுவும் திருப்பூரில் நடைபெற்றது அல்ல, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் போல உண்மையான கள நிலவரம் இல்லை, இங்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் அமைதியாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வதந்தி பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...