எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017”

எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017” கண்காட்சி மற்றும் விற்பனை பிப்ரவரி 18ம் தேதியன்று துவங்கி ஞாயிறன்று (இன்று) நடைபெற்று வருகிறது. 



ஃபிக்கி (எப்ஐசிசிஐ) லேடீஸ் ஆர்கனைசேஷனின் கோவை பிரிவு சார்பில், மகளிர் தொழில் முனைவோர் பொருட்காட்சி, “உமன் என்டர்பிரனர் பஜார் 2017” எனும் பெயரில் கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமணமண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தயாரிக்கப்படும் மகளிர் உற்பத்தி பொருட்கள் இங்கு 6-வது ஆண்டாக கண்காட்சியாக நடைபெற்று வருகிறது.

கோவையில் பெண் தொழில் முனைவோர், ஆண்களுக்கு சவாலாக பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர். இந்த கண்காட்சி விரிவான தொடர்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு, மகளிருக்கு உதவும் ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளுதல், புதிய வாய்ப்புகள் என்று உற்சாகமாக தகவல் பரிமாற்றம் பெற்று பயன்பெறவும் இந்த பொருட்காட்சி பெரிதும் உதவுவது கடந்த கால அனுபவமாகும். முழுமையாக, வணிக வளர்ச்சிக்கு பலவகையிலும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. 

துவக்க நிலையிலுள்ள மகளிர் தொழில் முனைவோர், இடைநிலையில் உள்ளவர்கள், டாப் இடத்தில் உள்ளவர் என்று அனைவரும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.



இதில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஃபாஷன் உடைகள், சாரீஸ், சல்வார், பிளாக் பிரிண்ட்ஸ், காலனிகள், டெரகோட்டா ஜீவல்லரி, வெள்ளி மற்றும் செயற்கை ஜுவல்லரி, கற்கள் பதித்த ஆபரணங்கள், லினன், வீட்டு அலங்காரம் மற்றும் பரிசுப் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பான தயாரிப்புகள் இன்ஜினியரிங் பொருட்கள் என ஏராளமான மகளிர் படைப்புகள் வாங்கலாம்.



முன்னதாக இந்த கண்காசியின் துவக்க விழாவில் கோவை, சுகுணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சுகுணா லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...