கோவையில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 70வது ஜோடிகளுக்கு திருமணம் - அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கோவை அவினாசி சாலையில் தனியார் அரங்கில் திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமானமு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் கூறியது போல, ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்களுடன் தனித்தனியாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புதுமண தம்பதிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச்சை பரிசாக அளித்தார்.



மேலும் 70 ஜோடிகளுக்கும் கல்யாண சீர் வரிசைகள் மற்றும் டிவி, மிக்சி, குளிர்சாதனப் பெட்டி, நாற்காலிகள் மற்றும் மின்சார அடுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...