சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் பாலம் அமைக்க பூமி பூஜை - நகர்மன்ற தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சிக்குட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதிக்கு மழைக்காலங்களில் பொதுமக்கள் செல்ல நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.9.90 லட்சம் செலவில் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு பூஜையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் மக்கள் நடந்து செல்ல பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலங்களில் பாதையைக் கடக்க சிரமமாக உள்ளதாகவும், பாலம் அமைத்து தரக்கோரியும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.



பொதுமக்களின் கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் பாலம் அமைத்துத் தர உறுதியளித்தது. அதனடிப்படையில், ரூ.9.90 லட்சம் செலவில் அந்தப் பகுதியில் பாலம் அமைக்கவும், இதேபோல் நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் பாதையைச் சீரமைக்கவும், அப்பள்ளி மாணவர்கள் நலன் கருதித் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இந்துமதி, ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...