கோவை வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னை தனியார் நிறுவன மேலாளரான கதிரவன் என்பவர், தனது நண்பர்களுடன் 4வது மலைக்கு வந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி வடக்கு பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (43). இவர் சென்னை புவி டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கோவை வந்த கதிரவன் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் தனது நண்பர்கள் 16 பேருடன் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளார். பின்னர் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, இன்று கீழே இறங்கியுள்ளனர்.



அப்போது கதிரவன் குழுவினர் 4 ஆவது மலைக்கு வந்த போது, இரவு 8 மணியளவில் திடீரென கதிரவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடன் வந்த நண்பர்கள் அவருக்கு முதலுதவி அளித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்த வனத்துறையினர் உதவியுடன் கதிரவன் உடல் கீழே கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...