கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைப்பு - மீண்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை வெள்ளியங்கிரி மலையில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இரவு முழுதும் போராடி தீயை கட்டுப்படுத்திய நிலையில், இன்று பிற்பகல் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைக்கப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடரில் 4 மற்றும் 5 ஆவது மலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக பக்தர்கள் செல்லும் பாதையின் அருகே காட்டு தீ ஏற்பட்டதால் சனிக்கிழமை மாலையில் இருந்து பக்தர்கள் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மலைக்கு சென்றவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே இரவு முழுவதும் போராடி இன்று அதிகாலை 4 மணியளவில் காட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் முதல், பக்தர்கள் வழக்கம் போல வெள்ளியங்கிரி மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் மேலே எடுத்துச் செல்கிறார்களா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...