கோவை மாவட்டம், ராக்கியாபாளையத்தில் உள்ள மலையின் மேற்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதி மலையின் பெரும்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினரும், வன அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராக்கியாபாளையம் மலைப்பகுதியில் ஏற்பட்டது இயற்கையான தீ விபத்து இல்லை எனவும், இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினரும், வன அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராக்கியாபாளையம் மலைப்பகுதியில் ஏற்பட்டது இயற்கையான தீ விபத்து இல்லை எனவும், இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.