கோவையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கோட்டைபுதூர் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நிஜாமுதீன் மற்றும் ஜபாருல்லா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கோட்டைபுதூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை கரும்புக்கடை, ஜி.எம்.நகர், கோட்டை புதூர் ஆகிய பகுதிகளில் திடீரென ரோந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை புதூர் ஜமீன்தார் நகர் பகுதியை சேர்ந்த ஜபாருல்லா என்பவருக்கு சொந்தமான கார் செட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, அதில் தலா 45 கிலோ என 50 மூட்டைகளில் 2.2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் பகுதியில் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பல்வேறு பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றுள்ளார். போலீசாரின் வாகன சோதனை மிகவும் தீவிரமாக இருந்ததால் ஜபருல்லாவிக்கு சொந்தமான கார் செட்டில் ரேசன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2.2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை பதுக்கி வைத்த நிஜாமுதீன் மற்றும் இடத்தின் உரிமையாளர் ஜபாருல்லா ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...