கோவையில் லாரி பேட்டரி திருடிய இளைஞர் கைது - கூட்டாளிகளுக்கு போலீஸ் வலை!

கோவை ஆத்துபாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜபாருல்லா என்பவரின் லாரியில் பேட்டரி திருடிய ரிஸ்வான் சுகைல் என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தமது நண்பர்களுடன் அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்பொழுது மூன்றுபேர் லாரியில் இருந்து பேட்டரியை திருடிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை ஜபாருல்லா பிடிக்க முயன்றார். அப்பொழுது, ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.



இதை அடுத்து அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஜபாருல்லா ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நபர் கரும்பு கடையைச் சேர்ந்த ரிஸ்வான் சுகைல் என்பதும், இவர் தனது நண்பர்கள் முகமது ஷெரீப், அப்சல் ரகுமான் ஆகியோருடன் சேர்ந்து லாரியில் இருந்து பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதை அடுத்து ரிஸ்வான் சுகைலை போலீசார் கைது செய்ததோடு, தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...