150 கிராம் தங்கத்தோடு வடமாநில இளைஞர் தப்பியோட்டம் - கோவை போலீசார் விசாரணை!

கோவையில் ரகுகுமார் என்ற தங்க பட்டறை உரிமையாளரிடம் ஆபரணங்கள் செய்வதற்காகப் பெற்ற 150 கிராம் தங்கத்துடன் தப்பியோடிய மேற்கு வங்கத்தை சேர்ந்த பாபன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு குமார் (வயது45). இவர் பொன்னையராஜபுரம் பகுதியில் தங்க பட்டறை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த ஐந்து வருடங்களாக பாபன் என்ற நபர் பணியாற்றி வந்தார். மேற்கு வங்கத்தைச் சார்ந்த இவர், ரகுகுமார் தரும் தங்க உலோகத்தை ஆபரணமாக மாற்றி தருவது இவரது பணி.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7 லட்சம் மதிப்பிலான 150 கிராம் எடையுள்ள தங்கத்தை கொடுத்து தோடு மற்றும் கம்மல் செய்து தர கேட்டுள்ளார்.

ரகுகுமாரிடம் அந்த தங்க உலோகத்தைப் பெற்றுக் கொண்ட பாபன், தங்க நகை ஆபரணங்கள் செய்யாமல், தனது சொந்த ஊருக்கு தங்கத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து ரகுகுமார் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாபனை தேடி வருகின்றனர். தங்க நகை பட்டறையில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் சில நேரங்களில் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடுவது கோவையில் தொடர் கதையாகி வருவது தங்கப்பட்டறை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...