உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவின் போது, கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் இன்றுநடைபெற்றது. பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அர்ச்சகர் கிரிவாச பகவதி சிவாச்சாரியார் தலைமையில் ஐயப்பன் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஹரிவார சிவம், பரம்பரை கௌரவ பூசாரி முருகானந்தம், உடுமலை டாக்டர் சிவக்கனி சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.



சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பரிவட்டம் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர மேளதாளம், கேரள செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து இன்று மாலை கொடி இறக்குதல், கும்பம் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...