கிணத்துக்கடவு அருகே பள்ளி மாணவி மாயம் - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துகடவு அருகே வீட்டில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கிணத்துகடவு அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் குணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த (14) வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி மட்டும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டனர். காய்கறி வியாபாரம் முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த மாணவி காணாமல் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து மாணவியை பெற்றோர்கள் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...