நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் நடத்தி தங்கம், பரிசுப் பொருட்கள், பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.74 லட்சம் வரையில் வசூலித்து, மோசடி செய்த 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார்.

இதில், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத் அலி ஆகியோா் வேலை பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து உள்ளனர். குறிப்பாக மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை ஈர்த்திருக்கின்றனர்.

அதன்படி, முதலீடு செய்வோருக்கு தங்கம், பொருட்கள், பணம் போன்றவை தரப்படும் என தெரிவித்திருக்கின்றனர். இதனை நம்பி 46 முதலீட்டாளர்கள் ரூ.74 லட்சத்து 41 ஆயிரத்து 384 செலுத்தினர். ஆனால், கூறியது போன்று முதலீட்டாளர்களிம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.



இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முத்துக்குமார், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத்அலி ஆகிய 6 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 12 லட்சத்து 60 ஆயிரம் வீதம், 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டுமென நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...