சுவரொட்டிகளால் கலையிழக்கும் கிணத்துக்கடவு மேம்பால தூண்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுப்பதோடு, அழகிய ஓவியங்களை தூண்களில் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இது இருந்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அதனை மீறி அதிக அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. அரசியல் கட்சியினர், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் மேம்பாலத் தூண்கள் கலையிழந்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் அவை அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. இதைத் தடுக்க, வண்ண வண்ண ஓவியங்களை தூண்களில் தீட்ட வேண்டும். மேலும், தடையை மீறி தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...