கோவையில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் ஆய்வு - தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

கோவை மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் நேரில் ஆய்வு செய்து, ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, கடந்த பிப்., 26ல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கிணத்துக்கடவு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் தலைமையிலான குழு, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அனுமதி பெற்ற அனுமதி பெறாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் தலா 100 குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கிரஷர் மற்றும் குவாரிகளை சுற்றிலும் நைலான் மற்றும் கம்பி வலை அமைக்கவும், துணியாலான மாசுத்தடுப்பு சல்லடை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாத கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வலை மற்றும் துணியை பயன்படுத்தினால் விவசாய நிலங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது, என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...