கோவை மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் நேரில் ஆய்வு செய்து, ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, கடந்த பிப்., 26ல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கிணத்துக்கடவு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் தலைமையிலான குழு, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அனுமதி பெற்ற அனுமதி பெறாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் தலா 100 குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கிரஷர் மற்றும் குவாரிகளை சுற்றிலும் நைலான் மற்றும் கம்பி வலை அமைக்கவும், துணியாலான மாசுத்தடுப்பு சல்லடை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாத கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வலை மற்றும் துணியை பயன்படுத்தினால் விவசாய நிலங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது, என்றனர்.
இந்நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் தலைமையிலான குழு, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அனுமதி பெற்ற அனுமதி பெறாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் தலா 100 குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கிரஷர் மற்றும் குவாரிகளை சுற்றிலும் நைலான் மற்றும் கம்பி வலை அமைக்கவும், துணியாலான மாசுத்தடுப்பு சல்லடை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாத கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வலை மற்றும் துணியை பயன்படுத்தினால் விவசாய நிலங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது, என்றனர்.