கோவை உக்கடம் அருகே பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

உக்கடம் அருகேயுள்ள சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள், சட்ட பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கோவை உக்கடம் அருகே பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உக்கடம் அடுத்த சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த முகாமில் சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள், பெண் பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.ஜே.அபிராமி பெண்களின் உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினை சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...