கோவையில் நண்பர் வீட்டில் தங்க நகை திருட்டு - மதுகுடிக்கச் சென்றபோது கைவரிசை!

மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அப்போது வினோத் வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகையை திருடிய அவரது நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த பீஷ்மர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை ராமநாதபுரம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் வினோத். இவரது தாயார் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

இவரைப் பார்ப்பதற்காக இவரது மனைவி ராகப்பிரியா மேட்டுப்பாளையம் சென்றுவிட்டார். அப்போது வினோத் தன்னுடன் பணியாற்றும் நான்கு நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது குடித்துள்ளார்.

இந்த நிலையில், ராகப்பிரியா மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து வீட்டில் தன் உடைமைகளை பார்த்தபொழுது மூன்று சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது வினோத் தனது நண்பர்களுடன் மதுகுடித்ததைத் தெரிந்து கொண்ட ராகபிரியா, அதில் யாரேனும் ஒருவர் நகையை திருடி இருக்கலாம் என சந்தேகித்தார்.

இதையடுத்து, ராகப்பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார், வினோத்தின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாமக்கல்லைச் சேர்ந்த பீஷ்மர் என்ற நபர் நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுகுடிக்கச் சென்றபோது நண்பர் வீட்டிலேயே நகைத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...