கோவையில் சாலையோரம் நிறுத்திய கார் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை ராம்நகரை சேர்ந்த சிவா என்பவர், தனது மாருதி 800 காரை கோகலே தெருவில் சாலையோரம் நிறுத்தி சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது கார் திருடப்பட்டதை அறிந்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ராம் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவா (வயது41). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது தந்தை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் சென்றுவர மாருதி 800 காரை பயன்படுத்திவந்துள்ளார்.

வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்த சிவா, கோகலே தெருவில் உள்ள சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு காரை எடுக்கலாம் என்று வந்து பார்த்தபொழுது கார் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் TN01 U2507 என்ற ரெஜிஸ்ட்ரேஷன் என்னைக் கொண்ட வெள்ளை நிற மாருதி 800 கார் மர்ம நபர்கள் திருடி விட்டதாக சிவா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...