கோவையில் சாலையோரம் நிறுத்திய கார் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை ராம்நகரை சேர்ந்த சிவா என்பவர், தனது மாருதி 800 காரை கோகலே தெருவில் சாலையோரம் நிறுத்தி சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது கார் திருடப்பட்டதை அறிந்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ராம் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவா (வயது41). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது தந்தை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் சென்றுவர மாருதி 800 காரை பயன்படுத்திவந்துள்ளார்.

வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்த சிவா, கோகலே தெருவில் உள்ள சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு காரை எடுக்கலாம் என்று வந்து பார்த்தபொழுது கார் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் TN01 U2507 என்ற ரெஜிஸ்ட்ரேஷன் என்னைக் கொண்ட வெள்ளை நிற மாருதி 800 கார் மர்ம நபர்கள் திருடி விட்டதாக சிவா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...