உலக மகளிர் தினம் - கோவையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் ஊடகவியலாளர்கள்!

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் பெண் ஊடகவியலாளர்கள், கோவை பிரஸ் கிளப் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆண் ஊடகவியலாளர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.


கோவை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊடகவியலாளர்களும், அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...