மகளிர் தின கொண்டாட்டம் - கோவையில் பெண் காவலர்களுக்கு பிசியோதெரபி ஆலோசனை!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்காக, கோவை காவல் ஆணையர் அலுவலக நடத்தப்பட்ட வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கினை துணை ஆணையர் சுகாசினி தொடக்கி வைத்தார்.



கோவை: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான "வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு" கோவை காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தொடங்கி வைத்தார்.



இதில், வலி வருவதற்கான காரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை முறைகள், வலி வராமல் தடுக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக பணியில் உள்ள பெண் காவலர்கள் சில நேரங்களில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய சூழலில் உடல் ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மகளிர் தினத்தன்று பிசியோதெரபி சிகிச்சை விழிப்புணர்வு வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...